பள்ளித் தோழி கைப்பிடித்து
போனேன் பல்கலைக்கழகம்
அறியவில்லை
அனைவர் பற்றியும்
நெருங்கவில்லை ஒரு
நொடிப் பொழுதும்
நட்பு நூர்க்க எவருடனும்…
குறுகிய வட்டமா நட்பு ????
அடித்தார்களா
அரவணைத்தார்களா??
ஏதேதோ
செய்தார்கள்
நினைத்தோம்
பகிடிவதை
என்று !!!
நமக்குப் புரியவில்லை
நம்மை – ஒன்றுசோர்க்கும்
ஆயுதம்
அதுவென ..
ஒருவர் இருவராய்
கலக்கமாய்
கலங்கிய
கண்ணோடு – சென்ற நாம்
ஒருவர் இருவராய் - இருந்த நட்பு உடைந்து…
அனைவரும் ஒருவரானோம்…
நன்றி கூற வார்த்தை கோர்த்தோம்
நம்மை பகிடிவதையால்
கோர்த்தவர்க்கு.
குறுக்கெல்லாம் கோபமாய்
குறுகிய நோக்குடன்
சிறுமையாய் சிந்தித்தோம்
சில காலம் மட்டுமே.
அனைத்தும் புரிந்தோம்
அனைவர் பற்றியும் - ஆனாலும்
கிடைத்தார்கள் நல்ல
தோழர்கள்.
காலத்தின் கட்டாயம்
கலக்கமாய் பிரிவோம் - ஒருநாள்
நிரந்தரமாயல்ல
நீண்ட காலம்
நட்பு
நீடிக்கும் - என்ற
நம்பிக்கையில்…….
யோ.ஷகிலா
2ம் வருடம்
கலைப்பீடம்
கொழும்புப் பல்கலைக் கழகம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக