வியாழன், 5 ஜூலை, 2012

பல்கலைக்கழக நட்பு




பள்ளித் தோழி கைப்பிடித்து
போனேன் பல்கலைக்கழகம்
அறியவில்லை
னைவர் பற்றியும்
நெருங்கவில்லை ஒரு
நொடிப் பொழுதும்
நட்பு நூர்க்க எவருடனும்…
குறுகிய வட்டமா நட்பு ????


அக்கா அண்ணா மார்
அடித்தார்களா
அரவணைத்தார்களா??
ஏதேதோ
செய்தார்கள்
நினைத்தோம் 
பகிடிவதை 
என்று !!!


நமக்குப் புரியவில்லை
நம்மை – ஒன்றுசோர்க்கும் 
யுதம் 
அதுவென ..
ஒருவர் இருவராய்
கலக்கமாய்
கலங்கிய 
கண்ணோடு – சென்ற நாம்
ஒருவர் இருவராய் - இருந்த நட்பு உடைந்து…
அனைவரும் ஒருவரானோம்…


நன்றி கூற வார்த்தை கோர்த்தோம்
நம்மை பகிடிவதையால்
கோர்த்தவர்க்கு.
குறுக்கெல்லாம் கோபமாய்
குறுகிய நோக்குடன்
சிறுமையாய் சிந்தித்தோம்
சில காலம் மட்டுமே.


அனைத்தும் புரிந்தோம்
அனைவர்  பற்றியும் - ஆனாலும்
கிடைத்தார்கள் நல்ல
தோழர்கள்.


காலத்தின் கட்டாயம்
கலக்கமாய் பிரிவோம் - ஒருநாள்
நிரந்தரமாயல்ல
நீண்ட காலம்
நிற்சயமாய்
நட்பு
நீடிக்கும் - என்ற 
நம்பிக்கையில்…….      

யோ.ஷகிலா
2ம் வருடம்
கலைப்பீடம் 
கொழும்புப் பல்கலைக் கழகம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites