“நவில்தொறும் நூனயம் போலும் பயில் தொறும் பண்புடையாளர் தொடர்பு”
இது ஐயன் வள்ளுவன் சொன்ன வாய்மொழி. படிக்கப் படிக்க இன்பம் தரும் நூலினைப் போல பழகப் பழக எம் மனதிற்கும் வாழ்விற்கும் இன்பம் தரவல்லது நட்பு.
“உன் நண்பனைப் பற்றிச் சொல்
நான் உன்னைப் பற்றிச் சொல்லுவேன்”
என்பதும் எல்லோராலும் பெரும்பாலும் கூறப்படுகின்ற கூற்றுத்தான். இந்த மண்ணில் பிறந்த மனிதரில் எதிரிகள் இல்லாமல் யாரும் மடிந்திருக்கலாம் ஆனால் நண்பன் இல்லாமல் யாரும் வாழ்ந்தார்களா? என்பது வியப்புக்குரிய வினாவாகத்தான் அமைந்து விடுகின்றது.