* * *

செயற்கரிய யாவுள நட்பின் அதுபோல் வினைக்கரிய யாவுள காப்பு

* * *

நிறைநீர நீரவர் கேண்மை பிறைமதிப் பின்னீர பேதையார் நட்பு

* * *

நவில்தொறும் நூல்நயம் போலும் பயில்தொறும் பண்புடையாளர் தொடர்பு

* * *

நகுதற் பொருட்டன்று நட்டல் மிகுதிக்கண் மேற்சென்று இடித்தற் பொருட்டு

* * *

புணர்ச்சி பழகுதல் வேண்டா உணர்ச்சிதான் நட்பாங் கிழமை தரும்

சனி, 14 ஜூலை, 2012

நீங்கள் காதலரா கல்யாணமானவரா .....



காதலுக்கும், கல்யாணத்துக்கும் நிறைய வித்யாசம் இருக்கு.....


* சாலையில் கை கோர்த்துக் கொண்டு நடந்து செல்பவர்கள் காதலர்கள்.
* நீ முன்னாடி போன நான் பின்னாடி போவேன் என்று ஆளுக்கொரு பக்கம் போவது தம்பதிகள்.

* பசி, உறக்கம் மறக்க வைப்பது காதல்.
* இதை மட்டுமே நினைக்க வைப்பது கல்யாணம்

* உறக்கத்தில் காணும் இனிமையான கனவுதான் காதல்.
* அந்த இனிமையான கனவைக் கலைக்கும் கடிகார அலறல் சத்தம்தான் கல்யாணம்

வியாழன், 5 ஜூலை, 2012

பல்கலைக்கழக நட்பு




பள்ளித் தோழி கைப்பிடித்து
போனேன் பல்கலைக்கழகம்
அறியவில்லை
னைவர் பற்றியும்
நெருங்கவில்லை ஒரு
நொடிப் பொழுதும்
நட்பு நூர்க்க எவருடனும்…
குறுகிய வட்டமா நட்பு ????


செவ்வாய், 26 ஜூன், 2012

ஜனநாயகம் என்றால் என்ன?


ஜனநாயகம் என்றால் என்ன?



ஆதி மனிதன் தனக்கு தேவையான விடயங்களை தானாகவே உற்பத்தி செய்து வாழ்ந்தான். பின்னர் மனித தேவைகளும் விருப்பங்களும் அதிகரித்துச் சென்றதன் காரணமாக மனிதன் ஏனையோருடன் இடைத்தொடர்புகளை ஏற்படுத்திக் கொண்டான். மனிதனின் தேவைகளை நிவர்த்தி செய்யும் பொருட்டு அரசு தேற்றம் பெற்றது. இன்றைய அரசுகளில் ஜனநாயகம் மிகவும் முக்கிய ஒரு விடயமாக மாறியுள்ளது. ஜனநாயகம் என்பது மக்கள் ஆட்சி என கூறலாம். ‘டிமொகிரசி’ என்ற சொல் கிரேக்க வார்த்தைகளிலிருந்து பெறப்படுகின்றது. ‘டிமோ’(DEMO) என்பது மக்கள் என்பதையும் ‘கிரேசி’ (CRACY) என்பது இறைமை அல்லது அதிகாரம் என்பதையும் குறிக்கின்றது. ஜனநாயகம் நேரடி ஜனநாயகம், மறைமுக ஜனநாயகம் 2 வகையாக பிரிக்கப்பட்டடுள்ளது. ஜனநாயகமானது 3 முக்கிய விடயங்களை கொண்டுள்ளது. அவையாவன:- 

1. சமத்துவம்
2. மக்கள் இறைமை
3. சுய ஆட்சி


வியாழன், 14 ஜூன், 2012

Economic Exam papers.



கொழும்பு பல்கலைக்கழகம் இலங்கை
கலைப்பீடம்
முதலாம் வருட கலைமாணி பரீட்சை 
(பொருளியல்)-2011
(முதலாம் பருவம்)

ECN 1101ஆரம்ப சிற்றினப் பொருளாதாரம்
அனுமதிக்கப்பட்ட நேரம்: இரண்டு(2) மணித்தியாலங்கள்
ஏதாவது நான்கு (4) வினாக்களுக்கு விடையளிக்குக.
கணிப்பாண் பயன்படுத்தப்பட முடியும். வரைபுத்தாள் வழங்கப்படும்.
1,
1)   பொருத்தமான வரைபடங்களினைப் பயன்படுத்தி கீழே தரப்பட்டுள்ள ஒவ்வொரு நிகழ்வுகளினதும் பொருளாதார விளைவுகளினை விளக்குக.

i)      பொருளாதாரமொன்று வாழைப்பழம் மற்றும் தக்காளிகளினை உற்பத்தி செய்கிறது. காரணி செறிவு விகிதமானது நிலையானது அல்ல.

ii)   மிகக் குறைந்தளவு மாம்பழங்களை உண்பதைவிட மிக அதிகமான மாம்பழங்களினை உண்பது மோசமானதாக இருக்கக்கூடும்.

iii) கம்பஹா மாவட்டத்தில் உள்ள தெங்கு தோட்ட நிலங்கள் வீடு கட்டுவதற்காக விற்பனை செய்யப்பட்டுள்ளன. 


புதன், 11 ஏப்ரல், 2012

மாணவர்களின் ஆளுமை வளர்ச்சியில் சகபாடிகளின் பங்களிப்பு





“நவில்தொறும் நூனயம் போலும் பயில் தொறும் பண்புடையாளர் தொடர்பு”

இது ஐயன் வள்ளுவன் சொன்ன வாய்மொழி. படிக்கப் படிக்க இன்பம் தரும் நூலினைப் போல பழகப் பழக எம் மனதிற்கும் வாழ்விற்கும் இன்பம் தரவல்லது நட்பு.

“உன் நண்பனைப் பற்றிச் சொல்
நான் உன்னைப் பற்றிச் சொல்லுவேன்” 

என்பதும் எல்லோராலும் பெரும்பாலும் கூறப்படுகின்ற கூற்றுத்தான். இந்த மண்ணில் பிறந்த மனிதரில் எதிரிகள் இல்லாமல் யாரும் மடிந்திருக்கலாம் ஆனால் நண்பன் இல்லாமல் யாரும் வாழ்ந்தார்களா? என்பது வியப்புக்குரிய வினாவாகத்தான் அமைந்து விடுகின்றது.




செவ்வாய், 10 ஏப்ரல், 2012

"பஞ்ச்" தத்துவம்





1) பீடியால் சுட்ட புண் உள்ளாறும், ஆறாதே லேடியால் சுட்ட மனம்.
2) நாம் நோக்கும் பெண் நம்மை நோக்காவிடில், Nokia வாங்கி என்ன பயன் .


Political Science Exam papers





கொழும்புப் பல்கலைக்கழகம், இலங்கை

கலைப்பீடம்

முதலாம் வருடக் கலைமாணிப் பரீட்சை 2011-2012

முதலாம் பருவம்

Psc 1101-அரசியல் விஞ்ஞானம்ஓர் அறிமுகம்




இரண்டு மணித்தியாலங்கள்
ஏதேனும் முன்று(03) வினாக்களுக்கு மட்டும் விடையளிக்குக.
ஓவ்வொரு வினாவுக்கும் 20 புள்ளிகள் வீதம் வழங்கப்படும்.

01. அரசியல் விஞ்ஞான ஆய்வின் பரிணாம வளர்ச்சியை அதன் பிரதான திருப்பமுனைகளுடன் தொடர்புபடுத்திப் பரீட்சிக்குக.

02.a) “அதிகாரம்”; என்ற எண்ணக்கரு பற்றி நீர் விளங்கிக்கொள்வது யாது?
b) “அதிகாரம”; பற்றிய கல்வியில் இரண்டு அரசியல் விஞ்ஞான கோட்பாட்டு அணுகுமுறைகளை விபரிக்குக.

ஞாயிறு, 4 மார்ச், 2012

2011 உலகப் பார்வை

ஜனவரி 1
எஸ்தோனியா நாடானது யூரோ நாணயத்தை முதன் முதலாக ஏற்றுக்கொண்டதை தொடர்ந்து 17வது நாடாக ஐரோப்பிய ஒன்றிய கூட்டமைப்பில் இணைந்தது.

ஜனவரி 9 - 15
தெற்கு சூடான் தன்னை ஒரு சுதந்திர நாடாக பிரகடனப்படுத்திக் கொள்ள வாக்கெடுப்பு நடத்தியது.

செவ்வாய், 24 ஜனவரி, 2012

சுனாமி என்ற அரக்கன்


   சூரியன் உதித்தும் 
    உதிக்காமலிருந்த நாள்
    அமைதியான கடலன்னை
      சினம் கொண்ட நாள்    

அழகிய அலைகள்         
அவலட்சணமான நாள்….
இரக்கமில்லாதவர் கண்களிலும்
இரத்தம் வடிந்த நாள்….

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites