* * *

செயற்கரிய யாவுள நட்பின் அதுபோல் வினைக்கரிய யாவுள காப்பு

* * *

நிறைநீர நீரவர் கேண்மை பிறைமதிப் பின்னீர பேதையார் நட்பு

* * *

நவில்தொறும் நூல்நயம் போலும் பயில்தொறும் பண்புடையாளர் தொடர்பு

* * *

நகுதற் பொருட்டன்று நட்டல் மிகுதிக்கண் மேற்சென்று இடித்தற் பொருட்டு

* * *

புணர்ச்சி பழகுதல் வேண்டா உணர்ச்சிதான் நட்பாங் கிழமை தரும்

திங்கள், 5 டிசம்பர், 2011

கொழும்புப் பல்கலைக்கழகத்தின் தமிழ்க்கலைப் பட்டதாரிகள் சங்கத்தினால் மேற்கொள்ளப்பட்ட கபொத. சாதாரணதர மாணவர்களுக்கான கருத்தரங்கு



கொழும்புப் பல்கலைக்கழகத்தின் தமிழ்க்கலைப் பட்டதாரிகள் சங்கத்தினுடைய கல்விச் செயற்திட்டங்கள் வெறுமனே கிளிநொச்சி முல்லைத்தீவு என்பதோடு நின்றுவிடாது அனைத்து மாவட்டங்களுக்குமான கல்விப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்ற முடிவையும் முயற்சிகளையும் மேற்கொண்டு வருகின்றது. இதன் வெளிப்பாடாக பதுளை பசறை மற்றும் நுவரெலியா போன்றவற்றை இணைத்துக்கொண்டு கா.பொ.த.சாதாரணதர மாணவர்களுக்கான இறுதிக் கருத்தரங்குகளை நடாத்துவது தொடர்பில் செயற்குழு உறுப்பினர்களால்களால் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது இதற்கான வேண்டுகோளை மடுல்சீமைப் பங்குத்தந்தை அருட்திரு கிறிஸ்டி ஜோன் CMF அவர்கள் மேற்கொண்டிருந்தார்



வெள்ளி, 21 அக்டோபர், 2011

Are politicians for the people or are people for politicians?

In a democratic country commonly, it is believed that politicians elected by people are bound to ensure the well-being of public masses. We know that Sri Lanka is identified as a democratic nation in the world. And also in our country too we can see democratic procedure of electing political leaders to represent parliament. The parliament is the place where the law that how the country public should be ruled is made.

புதன், 19 அக்டோபர், 2011

Political Science Exam Papers,

கொழும்புப் பல்கலைக்கழகம் இலங்கை

கலைப்பீடம்

மூன்றாம் வருடக் கலைமாணிப் பரீட்சை பருவம் - 2, 2011

3252- ஒப்பீட்டு நோக்கிலான பொதுக் கொள்கை மற்றும் நிர்வாகம்

இரண்டு (02) மணித்தியாலங்கள்



ஏதேனும் மூன்று வினாக்களுக்கு விடை தருக.


01. அபிவிருத்தி அடைந்துவரும் நாடுகளின் உள்நாட்டு பொருளாதாரத்தில்பூகோளமயமாக்கல் செயன் முறையானது ஏற்படுத்தியுள்ள தாக்கத்தை ஆராய்க.


02.பொதுக்கொள்கை மற்றும் பொதுத்துறை நிர்வாகம் என்பன அரச - மைய அபிவிருத்தி மற்றும் நலன்புரி அரசு என்பவற்றில் இருந்து குறைந்து செல்லும் நலன்புரி அரசை நோக்கி மாற்றமடைந்துள்ளன என நீர் கருதுகிறீரா? உமது விடையை உறுதிப்படுத்துக.


Sociology Exam Papers,

 
 
கொழும்புப் பல்கலைக்கழகம் இலங்கை

கலைப்பீடம்

முதலாம் வருடக் கலைமாணிப் பரீட்சை பருவம் - 2, 2011

SOC - 1202   உளவியல் தத்துவங்கள்

இரண்டு (02) மணித்தியாலங்கள்
 
 
 
எவையேனும் நான்கு வினாக்களுக்கு விடை தருக. ஒவ்வொரு வினாவிற்கும் சமமான புள்ளிகள் வழங்கப்படும்
 
 
01. மனித நடத்தையினைக் கற்பதில் சமூகவியலுக்கம் உளவியலுக்கும் இடையேயான வேறுபாடுகள் எவை?
 
 
02.நடத்தையினைக் கற்பதில் பண்பாட்டினைக் கருத்தில் கொள்வது ஏன் அவசியமானது விளக்குக?

International Relations Exam Papers,

 


கொழும்புப் பல்கலைக்கழகம் இலங்கை

கலைப்பீடம்

முதலாம் வருடக் கலைமாணிப் பரீட்சை பருவம் - 2, 2011

INR - 1204- சர்வதேச உறவுகளின் நடைமுறை

இரண்டு (02) மணித்தியாலங்கள்



நான்கு (04) வினாக்களுக்கு மட்டும் விடை தருக.


01. போரின் இடைக்காலத்தில்  (1918 - 1939) சர்வதேச அரசியல் முறைமையில் காணப்பட்ட முனைப்பான அம்சங்கள் யாவை?


02. 1945 - 1970 காலத்தில் வல்லரசுக்கிடையிலான இடைத்தொடர்புகளின் (Interactions) இயல்புகளைப் பரிசீலிக்குக?

திங்கள், 17 அக்டோபர், 2011

Political Science Exam Papers

கொழும்புப் பல்கலைக் கழகம் - இலங்கை

கலைப்பீடம்

கலைமாணி மூன்றாம் வருடப் பரீட்சை (பருவம் 2) - 2011

PSC 3263 ஒப்பீட்டு நோக்கிலான அரசியல் நிறுவனங்கள்.

இரண்டு மணித்தியாலங்கள்.

ஏதேனும் மூன்று வினாக்களுக்கு விடையளிக்குக.
ஒன்றில்...

01. நவீனமாதல் மற்றும் அரசியல் நவீனமாதல் கோட்பாடுகளை விளக்குக.
அல்லது.

நவீன அரசுகளில் அரசியல் நவீனமயமாதலின் பண்புகளையும் பிரச்சினைகளையும் கலந்துரையாடுக

02. விளக்குக.

1. அரசியல் முறைமை மற்றும்

2. அரசியல் முறைமையின் பிரதான செயற்பாடுகள்.

Sociology Exam Papers



கொழும்புப் பல்கலைக்கழகம் - இலங்கை

மூன்றாம்வருடக்கலைமாணிப் பரீட்சை  -2011

3246 சமகாலச் சமூகவிவகாரங்கள்

 நேரம் 02 மணித்தியாலம்

 முன்று(03)வினாக்களுக்கு விடை தருக.

1.சமூகவியல் அணுகுமுறையின் மூலமாகச் சமூகவிவகாரங்களைக் கற்பதன் முக்கியத்துவத்தினை உதாரணங்களோடு பரிசீலிக்குக.


2.பொருத்தமான கோட்பாட்டு அணுகுமுறைகளோடு தொடர்புபடுத்தி வறுமைக்கான காரணங்களை விமர்சனரீதியாகப் பரிசீலிக்குக.

வெள்ளி, 14 அக்டோபர், 2011

கலைப் பட்டதாரிகள் அமைப்பின் 2011கான நிர்வாக உறுப்பினர்கள்


  •        தலைவர் - பாமினி செல்லத்துரை

  •        செயலாளர் - ஜெனிகரன்

  •        பொருளாளர் - குமரன், நதியா  

  •        பத்திராதிபர் - ஜீவா

  •        உறுப்பினர்கள் - ஜெகன் பிரகாஸ்,  
                                                   கௌசல்யா, விசாலினி




    •  ஆலோசனைக்குழு  - றுக்சான், சந்துரு,
                                                                றொண்ஷன்.
      கலைப் பட்டதாரிகள் அமைப்பின்  பணிக்குழு 
      உறுப்பினர்கள்  
      அனைவரையும் அன்புடன்
      வாழ்த்துகின்றோம்

      புதன், 12 அக்டோபர், 2011

      புதிய தலைமைகளை வாழ்த்தி மகிழ்கின்றோம் ......

      கொழும்புப் பல்கலைக்கழகமானது தனியே கல்விச் செயற்பாடுகளுடன் நின்றுவிடாமல் சமூகத்தில் பல பணிகளையும் மேற்கொண்டுவருகின்றது. சமூகப் பணிகள்  அனைத்துப்பீட தமிழ் மாணவர்களினால் இரு பெரும் பல்கலைக்கழக அமைப்புக்களான
      •   கொழும்புப் பல்கலைக்கழக தமிழ்ச் சங்கம்  
      •  கொழும்புப் பல்கலைக்கழக இந்து மன்றம்

            என்பன வாயிலாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
       

      கடந்த கல்வியாண்டில் நிறைவான பணிகளை ஆற்றிய இச் சங்கங்களின் தலைமை மற்றும் உறுப்பினர்களின் செயற்பாடுகள் புதிய சங்கத்திடம் கையளிக்கும் நிகழ்வு அண்மையில் நிகழ்ந்திருந்தது. இந்து மன்றத்தினுடைய தலைவியாக கலைப்பீட மாணவி பார்கவி காந்திநாதன்  தெரிவுசெய்யப்பட்டிருந்தார் உறுப்பினர்களாக கமலரூபன், கலைச்செல்வி ஆகியோரும்,  மற்றும் தமிழ் சங்கத்தினுடைய செயலாளராக மேகலா கமலேஸ்வரனும் சங்க உறுப்பினர்களாக ஐஸ்வர்யலட்சுமிதேவி,  துஷானி  ஆகியோரும் கலைப்பீடத்திலிருந்து தெரிவுசெய்யப்பட்ட உறுப்பினர்களாவர்.

       பல எதிர்பர்ப்புக்களைச் சுமந்துள்ள சமூகத்தில் இவர்களின் பணி நிறைவானதாக அமையவும் மேற்கொள்ளவுள்ள திட்டங்கள் செயற்பாடுகள் சிறந்தோங்கவும்  தமிழ்க் கலைப்பட்டதாரிகள் சங்கத்தின் சார்பில் இவர்களை வாழ்த்தி நிற்கின்றோம்.


      International Relations Exam Papers




      கொழும்புப் பல்கலைக்கழகம்,இலங்கை
      கலைப் பீடம்
      வருடக் கலைமாணிப்பரீட்சை, பருவம்  -2011
      INR 3267 - இலங்கையின் வெளிநாட்டு கொள்கை : 1977 இன் பின்னர்
      இரண்டு (02) மணித்தியாலங்கள்

      முதலாம் வினாவுக்கும் ஏனையவற்றுள் இரண்டு (02) வினாக்களுக்கும் விடைதருக.

      1 .வெளிநாட்டுக் கொள்கையின் கோட்பாடு மாதிரிகள், வரையறைகள் மற்றும் எண்ணக்கருக்கள் ஆகியவற்றைப் பயன்படுத்தி 1977 இன் பின்னர் இலங்கையின் ஏதேனும் இரண்டு அம்சங்களின் வெளிநாட்டுக் கொள்கை நடவடிக்கைகளைப் பரிசீலனை செய்க.

      பிரபல நூல்களும் அதன்ஆசிரியர்களும்




      அகராதி நிகண்டு                                              இராவண சித்தர்
      அகல்யை                                                           புதமைப் பித்தன்
      அகல் விளக்கு                                                 மு.வரதாசனார்
      அசதிக் கோவை                                              ஒளவையரர்
      அடைக்கல மாலை                                       வீரமாமுனிவர்

      வியாழன், 6 அக்டோபர், 2011

      Geography Exam Papers

      கொழும்புப் பல்கலைக்கழகம் - இலங்கை

      பொதுக்கலைமாணிப் பரீட்சை (புவியியல்)

      இரண்டாம் அரையாண்டுப் பருவப் பரீட்சை 2011

      GYG -3243 அபிவிருத்தியில் பிரதேசப்பாங்குகள்

      நேரம் 02 மணித்தியாலம்

      ஒவ்வொரு பகுதியிலும் குறைந்த பட்சம் ஒரு வினாவையேனும் தெரிவு செய்து செய்து எல்லாமாக முன்று(03)வினாக்களுக்கு விடை தருக.

      இரண்டு உலக புற உருவப்படங்கள் மற்றும் பிறேசில் நெதர்லாந்துப் படங்கள் வழங்கப்படும்.

      பகுதி 01

      (01) “தற்பொழுது பிறேசிலின் பொருளாதாரம் பாரிய உலகப் பொருளாதாரத்தில் 7வது இடத்தை வகிக்கின்றது.வெளிநாட்டு நேரடி முதலீடுகளே இதில் செல்வாக்குச் செலுத்தும் காரணியாகும்” இக்கூற்றினை நுணகிப் பரிசீலிக்குக.

                                                                                                                       (20 புள்ளிகள்)

      புதன், 5 அக்டோபர், 2011

      க.பொ.த. சா.த செயலமர்வு 2011....

      உறவுகளே வணக்கம் !

       எங்களது வரலாற்று முயற்சிகளில் மீண்டும் ஓர் முயற்சியாக எம்மால் முன்னெடுக்கப்படும் க.பொ.த. சா.த செயலமர்வினை இம்முறை இருபிரதேசங்களுக்கு கார்த்திகை மாத முற்பகுதியில் விஸ்தரிக்க உத்தேசித்துள்ளோம்.

      1. பதுளை (மடுல்சீமை )

      2. முல்லைத்தீவு ( முள்ளியவளை)


      எனவே எமது இவ் ஆக்க பூர்வமான நடவடிக்கைகளுக்கு உங்களது பூரண ஒத்துழைப்பினை எதிர்பரர்த்து நிற்பதோடு உங்களால் இயன்ற
      வினாப்பத்திரங்கள், குறிப்புக்கள் என்பவற்றைத் தந்துதவுமாறு தாழ்மையுடன் கேட்டு நிற்கின்றோம்.
      நன்றி.
      இணைப்பாளர்
      பு. கிரிசாந்தன்
      கொழும்புப் பல்கலைக்கழகம்
      (077-5028905)

      செவ்வாய், 20 செப்டம்பர், 2011

      இலங்கையின் சுதந்திரத்திற்குப் பின்னர் மாறிமாறி ஆட்சிக்கு வந்த அரசாங்கங்களினால் அறிமுகப்படுத்தப்பட்ட பொதுக்கொள்கைகள்

      e


      உலக நாடுகளைப் பொறுத்த வரையில் பொதுக் கொள்கை என்பது முக்கிய ஒரு விடயமாகவே கருதப்படுகின்றது. பொதுக்கொள்கை என்பது மக்களினுடைய பிரச்சினைகளை அரசாங்கத்திற்கு எடுத்துக் கூறும் முயற்சியாகும். ஒரு நாட்டின் அரசாங்கத்தினுடைய சட்ட நியதிகள், திட்டங்கள், தீர்மானங்கள் மற்றும் அதன் செயற்பாடுகள் என்பன பொதுக் கொள்கையினை விருத்தி செய்யும் முக்கிய விடயங்களாக காணப்படுகின்றது. அரசாங்கத்தைப் பொறுத்தளவில் மிகவும் முக்கியமான ஒன்றாக கருதப்படும் இந்த பொதுக் கொள்கையானது பொதுத்துறை நிர்வாகத்தின் முக்கியமான ஒரு ஆய்வாக காணப்படுகின்றது. பொதுக்கொள்கையானது அரசாங்கத்தினால் சட்ட ரீதியாக மேற்கொள்ளப்படும் ஒரு செயன்முறையாகும். இக்கற்கை நெறியானது 1972ல் சார்ளஸ் மரியன் (Charles merrian) என்ற அரசியல் விஞ்ஞானி அரசியல் கோட்பாடுகளுக்கு இடையிலான யதார்த்தத்தை கட்டியெழுப்புவதனூடாக தோற்றம் பெற்றது.

      வெள்ளி, 9 செப்டம்பர், 2011

      கா.பொ.த. உ/த முன்னோடிக் கருத்தரங்கு துணுக்காய் 2011...



      அந்த நாட்களில் முழு இலங்கையே தேர்தலுக்காகக் காத்திருந்தது. முல்லைத்தீவு மாவட்டமும் நீடியவருடங்களுக்குப்பின்னரான தேர்தலொன்றுக்காக அலங்கரிக்கப்பட்டிருந்தது. இங்குதான் கொழும்புப் பல்கலைக்கழகத்தின் கலைப்பீடமானது கா.பொ.. /த மாணவர்களுக்கான இறுதிக் கருத்தரங்கினை முல்லைத்தீவு துணுக்காய்க் கல்வி வலயத்தினில் வெற்றிகரமாக மேற்கொண்டு திரும்பியிருக்கின்றது.

      வெள்ளி, 2 செப்டம்பர், 2011

      க.பொ.த சா/த முன்னோடிக் கருத்தரங்கு துணுக்காய் 2010.



      ஒவ்வொரு மனித உயிர்களினதும் அடிப்படை உரிமையாகக் கல்வி காணப்படுகின்றது. ஆனால் பல சிறார்களுக்கு இவ் அடிப்படை உரிமை மறுக்கப்படுவதோடு மட்டுமல்லாது பறிக்கவும்படுகின்றது.  இன்னும் சில நாடுகளில் அரசியல் இழுபறிகள், உள்நாட்டு குழப்பங்கள், சுயநலம் தேடும் அரசியல்வாதிகளின் செயற்பாடுகள் போன்றவற்றாலும் இவ் அடிப்படைக் கல்வியானது  இன்று பல்வேறுப்பட்ட சவால்களை எதிர்நோக்கி நிற்கின்றது.

      வியாழன், 1 செப்டம்பர், 2011

      சிரிக்க... சிந்திக்க....


      1. அப்பா:-ஏண்டா.. ம்ம ம்மா தானே அடிச்சாங்க அதுக்குப் போயி இப்படி அழுவுறே?”
        மகன் :- போங்கப்பா.. உங்கள மாதிரியெல்லாம் ன்னால அடிய தாங்‌‌கிக்க முடியாது.
       ****************************************************
                                                                                    
      2.ஆசிரியர் : ஏன்டா உன் புத்தகங்களை எல்லாம் பக்கத்து டேபிள்ள வச்சிட்டு நீ வந்து இங்க உட்கார்ந்திருக்க?
      மாணவன் :நீங்க தானே சார் பிரச்சினைகளை தள்ளி வைக்கணும்னு சொன்னீங்க?
       ***************************************************   

      வெள்ளி, 12 ஆகஸ்ட், 2011

      இலங்கை இன முரண்பாட்டின் தோற்றுவாய்.......


      அறிமுகம்  

      இலங்கையின் உள்நாட்டு மோதலானது பிரித்தானியரின் ஆட்சிக் காலத்தில் விதைக்கப்பட்ட பிரிவினைவாத விதைகளாகும். பிரித்தானியா இலங்கையைக் கைப்பற்றும் போது தமிழ், சிங்கள, முஸ்லிம்,இன உறவுகள் மிகவும் நெருக்கமாகவும் புரிந்துணர்வுடனும் காணப்பட்டன. இத்தகைய ஒற்றுமைத் தன்மையானது பிரித்தானியரின் காலணித்துவத்திற்கு சவாலாக அமைந்தது. இதனை மாற்றியமைத்து தமது நோக்கங்களை அடைந்து கொள்வதற்கு பிரித்தானியா பலவிதமான பிரிவினைவாதக் கொள்கைகளை இலங்கையர் மத்தியில் உருவாக்கினர்.

      காஷ்மீர் ஒரு வரலாற்றுப்பார்வை

         
      ஜம்முகாஷ்மீர்பிரதேசம் 217000 சதுர கி.மீ பரப்பளவைக் கொண்ட பிரதேசம். இதைவிட சிறிய நாடுகள் 93 உலகில் உள்ளன. இங்கு இந்தியா ஆக்கிரமித்துள்ள பகுதி 1,35,000 சதுர கி.மீ பகுதியாகும். 1962இல் இருந்து சீனாவால் ஆக்கிரமிக்கப்பட்டிருக்கும் 35,000சதுர கி.மீ நிலமும் இதில் உள்ளடங்கும். ஆஸாத் காஷ்மீர்எனும் 11,000 சதுர கி.மீ நிலம் மறைமுகமாக பாகிஸ்தானின் கட்டுப்பாட்டில் உள்ளது. இது தவிர கில்கித் பல்திஸ்தான் எனும் 71000 சதுர கி.மீ பகுதி பாகிஸ்தானின் நேரடிக் கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது. இவை அத்தனை பகுதிகளுமாக காஷ்மீரின் சனத்தொகை 13.5 மில்லியன்களாகும். இது உலகிலுள்ள 177 நாடுகளின் சனத்தொகையையும் விட அதிகமானதாகும்.

      வியாழன், 11 ஆகஸ்ட், 2011

      அடுத்த தலைமுறை ???.... (சிறுகதை)


      'அப்பா எழும்புங்கோவன் பிள்ளைக்கு நேரஞ்செண்டு போச்சு....இதுக்குத்தான் இரவிரவா கொம்பியூட்டருக்கு முன்னால கொட்டக்கொட்ட முழிக்காதையுங்கோ எண்டு சொன்னனான்........இப்ப எழுப்ப எழும்பிறியளில்லை

      வீட்டுக்குள் போட்டிருந்த வெப்பமாக்கியையும் மீறி பனிக்காலக் காலைக் குளிர் உடலினைச் சில்லிட வைத்தது. இறுக்கப் போர்த்திருந்த போர்வையைப் பிடித்திளுத்தவளின் மேல் கோபமாய் வந்தது அவனுக்கு. 

      'காலங்காலத்தால உன்ர சுப்ரபாதத்தத் தொடங்காத..........பொறு வாறன்..'


      Share

      Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites